சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் டிரைவர் இறந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: மயிலாப்பூர் விசாலாட்சித் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வைரவசுந்தரம் (45). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ். இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை நீலாங்கரை கடற்கரைக்குச் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பி வந்தனர்.
அவர்கள் நீலாங்கரை தாண்டி கிழக்கு கடற்கரைச் சாலையில் வரும்போது, அங்கு வந்த ஒரு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வைரவசுந்தரம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வேன் டிரைவர் மாம்பாக்கம் வேங்கைவாசலைச் சேர்ந்த ஷேக் முகம்மது அலியை (25) கைது செய்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

