கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையம் அருகே பனப்பாக்கம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.
சென்னை கொளத்தூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா (42), இவரது நண்பர்கள் பாடியநல்லூரைச் சேர்ந்த பாஸ்கர் (30), மகேஷ்குமார் (35), மணிகண்டன் (18), மணிகண்டன் (எ) சரத்குமார் (18).
இவர்கள் 5 பேரும் ஆந்திர மாநிலம் வரதையப்பாளையம் அருகே உள்ள கோனே நீர் வீழ்ச்சியை சுற்றிப் பார்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை காரில் புறப்பட்டனர். ÷பெரியபாளையம் அருகே பனப்பாக்கம் பகுதியில் கார் சென்றபோது திடீரென நிலைத்தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
தொடர்ந்து அவர்களை 108 அவசர ஊர்தியில் ஏற்றி பொன்னேரி அரசு மருத்துமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மகேஷ்குமார், சரத்குமார் ஆகிய இருவரும் இறந்தனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச் சம்பவம் தொடர்பாக பெரியபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

