சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கு புதிய சி.டி. ஸ்கேன் கருவி வாங்குவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சுமார் மூன்றரை கோடி மதிப்புள்ள இந்த கருவி இறக்குமதி செய்யப்பட்டு இன்னும் ஒரு மாதத்துக்குள் அரசு மருத்துவமனை சிகிச்சைப் பிரிவில் நிறுவப்படவுள்ளது.
முற்றிய நிலையில் காணப்படும் புற்றுநோய் கட்டிகளையும், அறுவை சிகிச்சை செய்யமுடியாத சிக்கலான பகுதிகளிலும் சிகிச்சை அளிக்க இந்தக் கருவி பயன்படும். ஒரே நேரத்தில் ஸ்கேன் செய்துகொண்டே, பாதிப்பு உள்ள இடங்களில் கதிர்வீச்சை செ லுத்தி சிகிச்சை அளிக்கவும் முடியும்.
கதிர்வீச்சை செலுத்தி சிகிச்சை செய்யும்போது அந்த கதிர்வீச்சு செல்லும் பாதைகளில் உள்ள நல்ல செல்களுக்கும் பாதிப்பு ஏற்படும். ஆனால் இந்தக் கருவியின் மூலம் பாதிப்புள்ள இடங்களை துல்லியமாக கண்டறிந்து அவற்றை அழிக்க முடியும்.
இது குறித்து சென்னை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் கனகசபை கூறுகையில்,""ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் இந்தக் கருவியை நிறுவுவதன் மூலம் பாதிப்புள்ள இடங்கள் துல்லியமாகக் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படும்'' என்றார் அவர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

