சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கடை கதவை உடைத்து பணம் திருட்டு

சென்னை சூளைமேட்டில் கடை கதவை உடைத்து பணம் திருடப்பட்டது.

Updated On :2 ஆகஸ்ட் 2013, 10:07 am

சென்னை சூளைமேட்டில் கடை கதவை உடைத்து பணம் திருடப்பட்டது.

சூளைமேடு செந்தில்நகரைச் சேர்ந்தவர் இலியாஸ் (31). இவர் 100 அடி சாலையில் ஒரு ஸ்டேஷ்னரி கடை நடத்தி வருகிறார்.

இலியாஸ் புதன்கிழமை இரவு வழக்கம்போல கடையை பூட்டவிட்டு வீட்டுக்குச் சென்றார். வியாழக்கிழமை காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த ரூ. 40 ஆயிரம் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர், சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.