செங்கல்பட்டு மேலமையூர் ஏரியில் மர்மநபர்களால் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.
செங்கல்பட்டை அடுத்த வல்லம் கிராமத்தைச் சேர்ந்த மணியின் மகன் சக்திவேல் (26). இவர் எலக்ட்ரீஷியனாக வேலைப் பார்த்து வந்தார்.
இவர் சனிக்கிழமை வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் மேலையூரில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு தாலுக்கா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அடுத்த போலீஸ் எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞர் வல்லம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

