சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வக்ஃபு வாரியத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு

தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவராக தமிழ்மகன் உசேன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Updated On :12 ஜூலை 2013, 7:16 am

தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவராக தமிழ்மகன் உசேன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற வக்ஃபு வாரியத் தேர்தலில் அவர் தேர்வு செய்யப்பட்டார். தாற்காலிகத் தலைவர் சலாவுதின் முகமது அயுப் தலைமையில் தேர்தல் நடைபெற்றது. அதில் வக்ஃபு வாரிய உறுப்பினர்களும், எம்.பி.க்களுமான ஜெ.எம்.அரூண், அப்துல் ரகுமான், எம்.எல்.ஏ.க்கள் முகமது ஜான், அஸ்லாம் பாட்சா உள்ளிட்டோர் தேர்தலில் பங்கேற்று வாரியத் தலைவரை தேர்வு செய்தனர்.

அதில், தமிழ்மகன் உசேன் மீண்டும் வக்ஃபு வாரியத் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தகவலை வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் அப்துல் ரபிக் தெரிவித்தார்.