நெய்வேலியில் நடைபெறும் ராணுவ ஆள்சேர்ப்பில் சென்னை மாவட்ட இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி வெளியிட்ட செய்தி: கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் உள்ள பாரதி விளையாட்டு அரங்கில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.
"சிப்பாய் தொழில்நுட்ப நர்சிங் உதவியாளர்' பதவியில் சேர 12-ம் வகுப்பு முடித்தவர்கள் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் முகாமில் கலந்து கொள்ளவேண்டும். "சிப்பாய் பொதுவான கடமை' பதவியில் சேர 10-ம் வகுப்பு முடித்தவர்கள் ஜூலை 20-ம் தேதி நடைபெறும் முகாமில் கலந்துகொள்ள வேண்டும்.
"சிப்பாய் தொழில்நுட்பம் அறிந்தவர்' பதவியில் சேர 8-ம் வகுப்பு படித்தவர்கள் ஜூலை 21-ம் தேதி நடைபெறும் முகாமிலும், "சிப்பாய் எழுத்தர் / ஸ்டோர் கீப்பர்' பதவியில் சேர 12-ம் வகுப்பு முடித்தவர்கள் ஜூலை 22-ம் தேதி நடைபெறும் முகாமிலும் கலந்துகொள்ளலாம்.
இந்த முகாமில் 17 ஆண்டு 6 மாதம் முதல் 23 வரை வயதுடைய ஆண்கள் கலந்துகொள்ளலாம் என்றார் சுந்தரவல்லி.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

