சென்னை தீவுத் திடலில் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற 3 நாள் அவகாசம் வேண்டும் என்று உரிமையாளர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரியுள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள சத்தியவாணி நகர் பகுதியில் தெருக்களை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் குடிநீர் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் வர முடியவில்லை என்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இதனையடுத்து அந்தப் பகுதிக்கு புதன்கிழமை சென்ற அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் அந்தப் பகுதியில் இருந்த 5 கடைகள் அகற்றப்பட்டன. இதனையடுத்து அங்கு திரண்ட கடைகளின் உரிமையாளர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் கடைகளை தாங்களே அகற்றி விடுவதாகவும், அதற்கு 3 நாள் அவகாசம் வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். இதனையடுத்து அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அவகாசத்துக்குள் கடைகளை அகற்றவில்லையென்றால், அதிகாரிகளே கடைகளை அகற்றி விடுவார்கள் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் சென்றபோது, அசம்பாவிதங்கள் நடைபெறாதவாறு தடுக்க 100-க்கும் மேற்பட்ட போலீஸôர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

