சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தீவுத்திடல் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற 3 நாள் அவகாசம்

சென்னை தீவுத் திடலில் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற 3 நாள் அவகாசம் வேண்டும் என்று உரிமையாளர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரியுள்ளனர்.

Updated On :12 ஜூலை 2013, 10:30 am

சென்னை தீவுத் திடலில் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற 3 நாள் அவகாசம் வேண்டும் என்று உரிமையாளர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரியுள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள சத்தியவாணி நகர் பகுதியில் தெருக்களை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் குடிநீர் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் வர முடியவில்லை என்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதனையடுத்து அந்தப் பகுதிக்கு புதன்கிழமை சென்ற அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் அந்தப் பகுதியில் இருந்த 5 கடைகள் அகற்றப்பட்டன. இதனையடுத்து அங்கு திரண்ட கடைகளின் உரிமையாளர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் கடைகளை தாங்களே அகற்றி விடுவதாகவும், அதற்கு 3 நாள் அவகாசம் வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். இதனையடுத்து அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அவகாசத்துக்குள் கடைகளை அகற்றவில்லையென்றால், அதிகாரிகளே கடைகளை அகற்றி விடுவார்கள் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் சென்றபோது, அசம்பாவிதங்கள் நடைபெறாதவாறு தடுக்க 100-க்கும் மேற்பட்ட போலீஸôர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டனர்.