தமிழகம் மற்றும் புதுவையில் வியாழக்கிழமை மழையோ, இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மழையோ இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதன்கிழமை காலை வரையிலான நிலவரப்படி சின்னக்கல்லாற்றில் 60 மி.மீ. மழை பெய்துள்ளது. தேவாலா, வால்பாறையில் 40 மி.மீ. மழையும், நடுவட்டம், செங்கோட்டையில் 30 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
பெரியாறு, தளி, மேல் ஆலத்தூர், பென்னாகரம், ஆரணி (20 மி.மீ.), உத்திரமேரூர், கூடலூர், செய்யாறு, போடிநாயக்கனூர், பொள்ளாச்சி, பேச்சிப்பாறை, குளச்சல், தேன்கனிகோட்டை (10 மி.மீ.) ஆகிய பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

