சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மாமல்லபுரத்தில் கடல்சார் அருங்காட்சியகம்

மாமல்லபுரத்தில் நீர்மூழ்கி கப்பலுடன் கூடிய கடல்சார் அருங்காட்சியகம் அமைக்கும் திட்டப் பணிகள் வேகமாக தொடங்கப்பட வேண்டும் என அதிகாரிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

Updated On :22 ஜூன் 2013, 9:07 am

மாமல்லபுரத்தில் நீர்மூழ்கி கப்பலுடன் கூடிய கடல்சார் அருங்காட்சியகம் அமைக்கும் திட்டப் பணிகள் வேகமாக தொடங்கப்பட வேண்டும் என அதிகாரிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக அரசு அறிவித்துள்ள சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை வேகமாக மேற்கொள்வது குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் சண்முகநாதன் தலைமையில் வெள்ளிக்கிழமை சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது, மாமல்லபுரத்தில் ரூ.10 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள நீர்மூழ்கி கப்பலுடன் கூடிய கடல்சார் அருங்காட்சியகம் அமைக்கும் திட்டப் பணிகளை வேகமாக மேற்கொள்ள வேண்டும்.

இதில், மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும், சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் "வாக்லி' நீர்மூழ்கிக் கப்பலை வரும் அக்டோபர் மாதத்துக்குள் மாமல்லபுரம் கடற்கரை மணல் பரப்பில் நிலை நிறுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

மேலும் தஞ்சையில் நாட்டிய விழா உள்ளிட்ட தமிழக அரசு அறிவித்துள்ள பிற திட்டங்களையும் வேகமாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் ஆ. அருண்மொழித்தேவன், கலை பண்பாடு மற்றும் அறநிலையத் துறை செயலர் ஆர். கண்ணன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் ஹேமந்த் குமார் சின்ஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.