சென்னையில் நள்ளிரவில் அதிவேகமாகவும், தாறுமாறாகவும் காரை ஓட்டியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் 2 பேருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த மே 23-ஆம் தேதி நள்ளிரவு அதிவேகமாகவும், தாறுமாறாகவும் ஓடிய ஒரு கார் எழும்பூர் பாந்தியன் சாலையில் நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த 3 சிறுவர்கள் மீது மோதியது. அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்துக்குக் காரணமானவர்கள் என்று கூறி எம்பீ குழுமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாஜி மற்றும் அவரது நண்பர்கள் குமார், அனில் ராவ், சயீது அன்வர் ஆகிய 4 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து அவர்களை கைது செய்தனர். இந்நிலையில், ஜாமீன் கோரி அனில் ராவ், சயீது அன்வர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி பி.ராஜேந்திரன், மனுதாரர்கள் இருவரும் திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

