தமிழக அளவில் செயல்பட்டு வந்த தேசிய லீக் கட்சி, அகில இந்திய கட்சியான இந்திய தேசிய லீக் உடன் இணைந்தது.
1994-ல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய லீக், உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இப்போது இக்கட்சியுடன் தமிழகத்தில் எம். பஷீர் அகமது தலைமையில் செயல்பட்டு வந்த தேசிய லீக் கட்சி இணைந்தது.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய தேசிய லீக் கட்சியின் செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு அக்கட்சியின் தேசியத் தலைவர் முகமது சுலைமான் செய்தியாளர்களிடம் பேசியது:
முஸ்லிம் அமைப்புகளை ஓரணியில் திரட்டும் முயற்சியின் முதற்கட்டமாக தேசிய லீக் எங்களுடன் இணைந்துள்ளது.
இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழக தலைவராக எம். பஷீர் அகமது செயல்படுவார்.
சிறுபான்மை மக்களுக்கு எதிராகச் செயல்படும் பாஜகவுக்கும், சிறுபான்மையினரை ஓட்டு வங்கியாக மட்டும் பயன்படுத்தி ஏமாற்றி வரும் காங்கிரஸýக்கும் மாற்றாக 3-ஆவது அணி அமைக்கும் முயற்சியில் இந்திய தேசிய லீக் ஈடுபடும் என்றார் சுலைமான்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

