சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டது.
வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதன் நகரைச் சேர்ந்த சகோதரர்கள் தேவராஜ், தாமோதரன். இதில் தாமோதரன் தனியார் வங்கியில் செக் கலெக்ஷ்ன் ஏஜென்டாக பணிபுரிகிறார். இருவரும் குடும்பத்துடன் திங்கள்கிழமை இரவு மொட்டை மாடியில் தூங்கினார்களாம். நள்ளிரவு 2.30 மணிக்கு கீழே வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு 19 சவரன் நகை, ரூ. 30,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாம். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த வீட்டில் 2 டால்மேஷன் வகை நாய்கள் உள்ளன. வெளியாட்கள் நுழைய முடியாத அந்த வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. நன்கு தெரிந்தவர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

