சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் டீக்கடைக்காரர் வீட்டில் 30 சவரன் நகை திருடு போனது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: செங்குன்றம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் அதே பகுதியில் டீக்கடை வைத்துள்ளார். அவர் சிகிச்சைக்காக திங்கள்கிழமை காலை புதுச்சேரி சென்றாராம்.
பின்னர் செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வந்த மாரியப்பன், வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாராம். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 30 சவரன் நகையை காணவில்லை என்பது தெரியவந்ததாம்.
இதனையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
காரில் ரூ. 10 லட்சம் கொள்ளை: அசோக் நகரில் நின்றிருந்த கார் கண்ணாடியை உடைத்து அதிலிருந்த ரூ.10 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலையைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரகாஷ் (60). ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான இவர், அசோக் நகரில் உள்ள ஆந்திரா வங்கியில் இருந்து ரூ.10 லட்சத்தை செவ்வாய்க்கிழமை காலை எடுத்துக்கொண்டு காரில் சென்றாராம்.
வீட்டுக்கு செல்லும் வழியில் அசோக் நகர் 53-ஆவது தெருவில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பாடு பார்சல் வாங்க சென்றாராம். அப்போது பணத்தை காரில் வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. திரும்பி வந்து பார்த்தபோது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு, ரூ. 10 லட்சம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

