ஆவின் மில்க்ஷேக், மசாலா மோர் பாக்கெட், உப்பு கலந்த வெண்ணெய் ஆகிய புதிய பொருள்களை ஆவின் அறிமுகப்படுத்தி உள்ளது.
புதிய பொருள்களை அறிமுகப்படுத்தி அதற்கான விற்பனை பால் மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை அமைச்சர் வி. மூர்த்தி திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.
ஆவின் மில்க்ஷேக்: இயற்கையான மூலப்பெருள்களுடன் பால் சேர்த்து வாழைப்பழ மில்க் ஷேக், ஆப்பிள் மில்க்ஷேக், வெண்ணிலா ஆரஞ்ச் மில்ஷேக், பைனாப்பிள் மில்ஷேக், கேரட் மில்க் ஷேக், வெண்ணிலா மால்ட் மில்ஷேக், சாக்லேட் மில்க் ஷேக் ஆகிய ஏழு சுவைகளில் ஆவின் மில்ஷேக் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது பாதாம் சுவையில் புதிய ஆவின் மில்க்ஷேக்கை ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. 200 மி.லி. அளவு கொண்ட டெட்ரா பேக் விலை ரூ. 20. இது 120 நாள்கள் வரை கெடாமல் இருக்கும்.
ஆவின் அறிமுகப்படுத்தி உள்ள மசாலா மோர் 200 மி.லி. விலை ரூ.10. மசாலா மோர் 120 நாள்கள் வரை கெடாமல் இருக்கும்.
உப்பு கலந்த வெண்ணெய் 500 கிராம் பாக்கெட்டுகள் ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது 100 கிராம் பாக்கெட்டுகளில் ரூ. 30-க்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை பால்பொருள்களை அமைச்சர் மாதவரம் மூர்த்தி அறிமுகம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குநர் ராமச்சந்திரன், இணை இயக்குநர் ராமன், பொது மேலாளர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பேசும்போது, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 100 புதிய ஆவின் பாலகங்களை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
புதிய ஆவின் பொருள்கள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

