சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

விதி மீறல்: திருவான்மியூரில் லேத் பட்டறைக்கு சீல்

திருவான்மியூரில் விதிகளை மீறி செயல்பட்டு வந்த லேத் பட்டறைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை சீல் வைத்தனர்.

Updated On :2 ஜூன் 2013, 8:53 am

திருவான்மியூரில் விதிகளை மீறி செயல்பட்டு வந்த லேத் பட்டறைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை சீல் வைத்தனர்.

இரவு நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அதிக சப்தத்துடன் அந்த பட்டறை செயல்பட்டதால், அதற்கு சீல் வைக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறியது: திருவான்மியூர், இந்திரா நகர், 14-வது சந்தில், குடியிருப்புப் பகுதியில் லேத் பட்டறை செயல்பட்டு வந்தது. இரவில் அதிக சப்தத்துடன் அந்தப் பட்டறை செயல்படுவதாக பல புகார்கள் வந்தன.

இதையடுத்து, அந்தப் பட்டறைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 16 பட்டறைகளுக்கு அண்மையில் சீல் வைக்கப்பட்டது என்றனர்.