சென்னை பாரிமுனையில் திருட்டு சி.டி.க்கள் தயாரித்த 6 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
இது குறித்து போலீஸார் வெளியிட்ட செய்தி:
சென்னை பாரிமுனை மலையபெருமாள் தெருவில் உள்ள ஒரு கடையில் போலீஸார் சனிக்கிழமை சோதனை நடத்தினர். அந்தக் கடையின் முகப்பில் வாழை இலைக் கடை இருந்தது. வெளியில் இருந்து பார்க்கும்போது அது வாழை இலைக் கடை போன்றுதான் தெரிந்தது.
இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் உள்ளே சென்று சோதனை செய்தபோது ஏராளமான ஆபாச சி.டி.க்கள் மற்றும் புதிய படங்களின் திருட்டு சி.டி.க்கள் இருப்பதைப் போலீஸார் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து, அந்த சி.டி.க்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சி.டி. தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கணினிகள், இயந்திரங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக சிவகுமார் (36), மாரிமுத்து, கார்த்திக் (31), சந்தோஷ் (29), தமீமுன் அன்சாரி (26), கட்டடத்தின் உரிமையாளர் தரணி (54) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். பறிமுதல் செய்த சி.டி.க்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 50 லட்சம் ஆகும்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

