உலக வர்த்தக, பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆசிய பகுதியில் அதிகரித்து வருவதால் இந்தியா உள்ளிட்ட கீழ்திசை நாடுகளின் கடல் வர்த்தகமும், அன்னிய முதலீடும் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ஜப்பான் தூதரக அதிகாரி மசொனோரி நகானோ கூறினார்.
சென்னையை அடுத்த தாழம்பூரில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் தொழில்நுட்பக் கல்லூரியின் 5-ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் மேலும் பேசியது:
அண்மையில் இந்தியப் பிரதம்ர் மன்மோகன் சிங்கின் ஜப்பான் வருகை இரு நாடுகளின் வர்த்தக உறவில் முன்னேற்றத்தை உருவாக்கி இருப்பதுடன், ஜப்பான் முதலீட்டாளர்களை பெருமளவில் ஈர்க்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நாடுகளிடையே வணிகமும், வர்த்தக உறவும் அதிகரிக்கும்போது அனைத்து நாடுகளையும் இணைக்கும் பாலமாக கடல் வணிகம்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதர நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ள வணிகத்தில் 90 சதவிகிதம் கடல் மூலம்தான் நடைபெற்று வருகிறது. உலகில் இன்று எந்த ஒரு நாடும் கடல் வணிகம் இல்லாமல் செயல்படமுடியாத நிலை உள்ளது.
எனவே கடல் வணிகம் மேற்கொள்ள உதவும் கப்பல்களின் சேவையும், தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கப்பல்களில் பணியாற்றுவதற்கான கல்வி,தொழில்நுட்பத்திறன் மற்றும் பயிற்சி பெற்று பட்டம் பெற்றுள்ள நீங்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமல்லாமல் உலக நாடுகளின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் நட்புறவு மேம்படவும் பணியாற்ற வேண்டும் என்றார்.
விழாவில் 174 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேஷ்,கேலைன் கப்பல் நிறுவன நிர்வாக அதிகாரி கோஜிஹிகாஷிஜிமா, துணைவேந்தர் கே.சேகர், அமெரிக்கன் டிஜிட்டல் பல்கலைக்கழக வேந்தர் அனுஷ் ராமச்சந்திரன், இணை துணைவேந்தர் கேப்டன் கே.விவேகானந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

