பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவில் தேர்ச்சிப் பெற்ற மாணவ, மாணவியருக்கு தனியார் நிறுவனங்களில் தொழில் பழகுநர் பயிற்சி (அப்ரென்டீஸ்ஷிப்) வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் தென் மண்டல தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் சார்பில் இந்தப் பயிற்சிக்குரிய தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுக்க மே 29-ஆம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது.
சென்னை தாம்பரம் ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில் அன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் இந்த நேர்காணலில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழுடன் வர வேண்டும்.
டி.என்.எஸ்.சி. வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பிரேக்ஸ் இந்தியா, டெல்பி டி.வி.எஸ்., ப்ரைன்ஸ் பொறியியல் நிறுவனம், ஆம்பிட்ரான் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்று மாணவ, மாணவியரை பயிற்சிக்காக தேர்ந்தெடுக்க உள்ளனர்.
இந்த வாய்ப்பினை பிளஸ் 2 மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

