தொலைபேசி மற்றும் அகண்ட அலைவரிசை திட்டத்தை அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளரகளுக்கு சலுகை அளிக்கும் "நம்பிக்கைத் திட்டம்' என்ற புதிய திட்டத்தை பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின்படி, மாதம் ரூ.400 கட்டண அளவுக்கு அதிகமாகவும், இரு மாதத்துக்கு ரூ.800 கட்டணத்துக்கு அதிகமாகவும் தொலைபேசி (லேண்ட் லைன்) மற்றும் அகண்ட அலைவரிசை (பிராட் பேண்ட்) திட்டங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைப் புள்ளி அளிக்கப்படும்.
இந்தப் புள்ளிகளைப் பெற ஆரம்பித்து, 6 மாதத்துக்குப் பின்னர் சலுகையை வாடிக்கையாளர் அனுபவிக்க முடியும். அதாவது ஒரு புள்ளிக்கு ஒரு அழைப்பு (இணைய அழைப்புகளுக்கு மட்டும்) இலவசமாக அளிக்கப்படும்.
வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 25 புள்ளிகளை அல்லது அதிகபட்சம் 500 புள்ளிகளைப் பெற்ற பிறகு, வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு நேரடியாகச் சென்றோ அல்லது 1500 என்ற எண்ணைத் தொடர்புகொண்டோ புள்ளிகளை சமர்ப்பித்து சலுகையைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது, ஆன்-லைன் மூலம் பதிவு செய்தும் சலுகையைப் பெறலாம் என பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

