சென்னை நந்தம்பாக்கம் அருகே ராணுவ அதிகாரி மனைவி நகைக்காக சனிக்கிழமை கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது:
நந்தம்பாக்கம் அருகே உள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராதா (75). இவரது கணவர் பாலசுப்பிரமணியன் ராணுவத்தில் மேஜராக பணிபுரிந்தவர். அவர் இப்போது உயிரோடு இல்லை.
ராதாவுக்கு அம்பிகா (50), அஞ்சனா (48) என இரு மகள்கள் உள்ளனர். அஞ்சனா பெங்களூரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அம்பிகா ராஜாஅண்ணாமலைபுரம் அருகே உள்ள ஆரைக்குளத்தில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.
ராதாவுக்கு சில நாள்களுக்கு முன்பு போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாம். இந்நிலையில் அந்த மருத்துவமனை ஊழியர் சுரேஷ், ராதாவுக்கு கண் கண்ணாடியை கொடுக்க அவர் வீட்டுக்கு சனிக்கிழமை சென்றாராம்.
அங்கு ராதா வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தாராம். அவர் அணிந்திருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து அவர் நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராதாவின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

