கோடைகால குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
இதற்காக 3 மாத ஒப்பந்த அடிப்படையில் 21 டேங்கர் லாரிகளை கூடுதலாக குடிநீர் விநியோகப் பணிகளுக்கு அமர்த்தியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குடிநீர் வாரியத்தின் மேலாண் இயக்குநர் பி.சந்திரமோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்துக்காக 9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 231 லாரிகளும், 6 ஆயிரம் கொள்ளளவு கொண்ட 104 லாரிகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
கோடை காலத்தில் குடிநீர்த் தேவை அதிகரித்துள்ளதால் லாரி குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில் சனிக்கிழமைமுதல் (மே 11), 20 ஆயிரம், 9 ஆயிரம் மற்றும் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 21 டேங்கர் லாரிகள் கூடுதலாக குடிநீர் விநியோகப் பணிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் 1.5 மில்லியன் லிட்டர் குடிநீரை நகரில் கூடுதலாக விநியோகிக்க முடியும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

