சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தமிழகத்தில் 23 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு

தமிழகத்தில் காலியாக உள்ள 23 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான அறிவிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Updated On :2 மே 2013, 10:28 am

தமிழகத்தில் காலியாக உள்ள 23 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான அறிவிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தின் பொதுத் துறை (சிறப்பு ஏ) வெளியிட்டுள்ள அறிவிக்கை விவரம்:

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 23 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. வகுப்புவாரி அடிப்படையில், இந்தப் பணியிடங்கள் 6 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

பின்தங்கிய வகுப்பினருக்கு 6 (பெண்கள் 2), பொதுப் பிரிவுக்கு 8 (பெண்கள் 4), தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 3 (பெண்கள் 1), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்-சீர்மரபினர் 4 (பெண்கள் 1), தாழ்த்தப்பட்டோர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியர்) 1, பின்தங்கிய வகுப்பினர்-முஸ்லிம்கள் 1 (பெண்கள் 1) என்ற அடிப்படையில் 23 காலிப் பணியிடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணியிடங்கள் அனைத்தும் நேரடி பணி நியமன முறையில் நிரப்பப்படும். தேர்வுக்கு விண்ணப்பிப்போரின் வயது வரம்பு ஜூலை 1-ஆம் தேதியுடன் முடிந்த காலத்தில் 48 வயதை எட்டியிருக்கக் கூடாது. தேர்வில் பங்கேற்க மூத்த வழக்குரைஞரிடம் இருந்து நற்சான்றை அளிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டிய இணையதள முகவரி:  http:www.tn.gov.indepartmentspublic.html

விண்ணப்பப் படிவத்துடன் சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களையும் இணைக்க வேண்டும். விண்ணப்பங்கள் மே 31-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டிய முகவரி: முதன்மைச் செயலாளர், பொதுத் துறை (சிறப்பு ஏ), தலைமைச் செயலகம், சென்னை-600009. எழுத்துத் தேர்வு ஜூலை 6- ஆம் தேதி நடைபெறும். தேர்வு நடைபெறும் இடங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தால் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பத்துடன் ரூ.500-க்கான வரைவோலையை (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250) இணைக்க வேண்டும். Registrar General, High Court of Madras, payable at chennai என்ற பெயரில் வரைவோலையை எடுக்க வேண்டும் என்று தேர்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.