சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மே 15-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
வடசென்னையில் நடைபெறும் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேச உள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
50 சதவீதத்துக்கும்மேல் பணிகள் முடிவடைந்த நிலையில் உள்ள சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திமுக சார்பில் எழுச்சி நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
மே 15-ஆம் தேதி தமிழகம் முழுவதும் இந்தக் கூட்டங்கள் நடைபெறும். வடசென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கருணாநிதி பேசுகிறார்.
பொதுச்செயலாளர் க.அன்பழகன் கடலூரிலும், பொருளாளர் மு.க.ஸ்டாலின் கரூரிலும், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் கோவையிலும் பேச உள்ளனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

