சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி மே 15-ல் திமுக சார்பில் பொதுக்கூட்டம்

சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மே 15-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

Updated On :2 மே 2013, 8:00 am

சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மே 15-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

வடசென்னையில் நடைபெறும் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேச உள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

50 சதவீதத்துக்கும்மேல் பணிகள் முடிவடைந்த நிலையில் உள்ள சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திமுக சார்பில் எழுச்சி நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

மே 15-ஆம் தேதி தமிழகம் முழுவதும் இந்தக் கூட்டங்கள் நடைபெறும். வடசென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கருணாநிதி பேசுகிறார்.

பொதுச்செயலாளர் க.அன்பழகன் கடலூரிலும், பொருளாளர் மு.க.ஸ்டாலின் கரூரிலும், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் கோவையிலும் பேச உள்ளனர்.