சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டேவின் 5-வது ஆண்டு நினைவு அஞ்சலி

காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டேவின் 5-வது ஆண்டு நினைவு தினம் சென்னையில் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

Updated On :2 மே 2013, 10:31 am

காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டேவின் 5-வது ஆண்டு நினைவு தினம் சென்னையில் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தியாகராய நகர் தக்கர்பாபா வித்யாலயா வளாகத்தில் நடந்தது. இதில் தமிழக தகவல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர் எம்.ராசாராம் பங்கேற்று நிர்மலா தேஷ்பாண்டேவுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

அவர் பேசும்போது, "காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டே சுயநலம் இல்லாமல் நாட்டுக்கு பல்வேறு பணிகளை செய்தவர். உலகத்தில் அனைவரும் சமம் என்று கருதியவர். நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்தவர்' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த அருணாசலம், காந்திய ஒருங்கிணைந்த அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பி.மாருதி உள்பட பலர் பங்கேற்றனர்.