வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் (இஸ்ரோ) தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சத்திய பாமா பல்கலை கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 22-ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் பல்கலைகழகத்தின் 25-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது:
செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதை பூமிக்கு அருகில் வரும்போதுதான் அதன் வட்டப்பாதையில் செயற்கைக்கோளை நிறுத்த முடியும். 26 மாதங்களுக்கு ஒரு முறை செவ்வாய்கிரகம் புவி வட்டப் பாதைக்கு நெருக்கமாக வரும். அதன் அடிப்படையில் வரும் அக்டோபர் மாத இறுதி வாரம் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் செவ்வாய் கிரகத்துக்கு இந்திய செயற்கைக்கோள் செலுத்தப்படும். இந்தச் செயற்கைகோள் செவ்வாய் கிரகத்தின் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும்.
அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், சீனா, ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகிய நாடுகள்தான் செயற்கைக்கோளை அனுப்பி அதன் சுற்றுவட்டப் பாதையில் நிறுத்தி உள்ளன.
அந்த வரிசையில் இனி இந்தியாவும் இடம் பெறும். செவ்வாய்கிரக சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் நிலை நிறுத்திய 6-ஆவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும்.
மேலும் நடப்பாண்டில் 12 செயற்கைக்கோள்கள் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. சத்திய பாமா பல்கலை கழகத்தில் உள்ள சிறிய ரக செயற்கைகோள் விரைவில் ஏவப்படும் என்றார் ராதாகிருஷ்ணன்.
இந்த ஆண்டு 61 பேருக்கு டாக்டர் பட்டமும் மற்றும் 1281 பேருக்கு இளைநிலை பட்டமும், 1356 பேருக்கு முதுநிலை பட்டத்தையும் பல்கலைகழக வேந்தர் ஜேப்பியார் வழங்கினார்.
இந்த ஆண்டு 1013 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் சத்திய பாமா பல்கலை கழகத்தின் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத் தலைவர் டாக்டர் சாந்தாவுக்கு வழங்கப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

