சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ரெளடி கருக்கா சுரேஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

புளியந்தோப்பில் கைது செய்யப்பட்ட கருக்கா சுரேஷ் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On :22 ஏப்ரல் 2013, 9:29 am

புளியந்தோப்பில் கைது செய்யப்பட்ட கருக்கா சுரேஷ் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இது குறித்து போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி: புளியந்தோப்பு பகுதியில் உள்ள பி.கே. காலனி, கே.எம். கார்டன், பட்டாளம் ஆகிய இடங்களில் சுரேஷ் என்ற கருக்கா சுரேஷ் என்பவர் பொதுமக்களை மிரட்டி பணம் கேட்டும், வழிப்பறி மற்றும் கொலை முயற்சி சம்பவங்களிலும் ஈடுபட்டு

வந்தார்.

இதையடுத்து 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சுரேஷ் கைது செய்யப்பட்டார். அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சுரேஷ் குண்டர் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புளியந்தோப்பு பகுதியில் சுமார் 41 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.