சென்னை சேத்துப்பட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரை வாகனச் சோதனைக்காக தடுத்தபோது கீழே விழுந்து காயமடைந்தார். அவரை தடுத்து நிறுத்த முயன்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரும் தடுமாறி விழுந்து காயமடைந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சேத்துப்பட்டு மங்காளபுரத்தைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (25). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு சேத்துப்பட்டு சத்தியமூர்த்தி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது வாகன சோதனை செய்துக் கொண்டிருந்த போலீஸார், அவரை நிறுத்த முயன்றனர்.
போலீஸாரிடம் சிக்காமல் இருப்பதற்காக மனோஜ்குமார், சாலையின் ஓரமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சாலையோர தடுப்பின் மீது மோட்டார் சைக்கிள் மோதியில் மனோஜ்குமார் காயமடைந்தார்.
அதேவேளையில் அவரை தடுக்க முயன்ற சேத்துப்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நித்யானந்தம் தடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்தார்.
மனோஜ்குமார் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், நித்யானந்தம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து சேத்துப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

