சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புழல் ஏரியில் குளித்த பஸ் நடத்துநர், மகனுடன் நீரில் மூழ்கிச் சாவு

புழல் ஏரியில் ஞாயிற்றுக்கிழமை குளித்த, அரசு பஸ் நடத்துநர், மகனுடன் நீரில் மூழ்கி இறந்தார்.

Updated On :2 ஏப்ரல் 2013, 8:51 am

புழல் ஏரியில் ஞாயிற்றுக்கிழமை குளித்த, அரசு பஸ் நடத்துநர், மகனுடன் நீரில் மூழ்கி இறந்தார்.

செங்குன்றம் அருகே ஆட்டந்தாங்கள் கெங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (49). மாநகர போக்குவரத்துக் கழக பேருந்தில் நடத்துனராக பணிபுரிகிறார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் மனைவி ரேவதி (35), மகன் ஜீவரத்தினம் (14) மகள் பவானி, மனைவியின் தங்கை பழனியம்மாள், அவரது குழந்தைகள் கெüசல்யா, நந்தகுமார் ஆகியோர் புழலேரி ஆலமரம் பகுதியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, செல்வம் தனது மகன் ஜீவரத்தினத்திற்கு நீச்சல் கற்றுத்தர ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ஆழமான பகுதியில் சேற்றில் சிக்கிய இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர்.

தகவல் அறிந்த செங்குன்றம் தீயணைப்பு படைவீரர்கள் புழலேரிக்கு சென்று செல்வம் சடலத்தை மீட்டனர். திங்கள்கிழமை காலை 7 மணி அளவில் ஜீவரத்தினம் சடலம் மீட்கப்பட்டது.

இதுகுறித்து செல்வத்தின் மனைவி ரேவதி செங்குன்றம் போலீசில் புகார் செய்தார். வழக்கைப்பதிவு செய்த சப்இன்ஸ்பெக்டர் சத்தீஷ், இருவரின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு சென்னை ஸ்டேன்லி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.