சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருமணமான 20 நாளில் புதுப்பெண் தற்கொலை

சென்னை புழல் அருகே திருமணமான 20-வது நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Updated On :2 ஏப்ரல் 2013, 10:23 am

சென்னை புழல் அருகே திருமணமான 20-வது நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

கொளத்தூர் புதிய லட்சுமிபுரம் வ.உ.சி.தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன்

முருகனுக்கும் (32), கொடுங்கையூர் சின்னாண்டிமடம் திருவள்ளூவர் சாலையில் வசிக்கும் பாபு-கஸ்தூரி தம்பதியரின் மகள் உஷாவுக்கும் (27) மார்ச் மாதம் 13ம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது பெண் வீட்டார் உஷாவுக்கு 12 பவுன் நகை வரதட்சிணையாக கொடுத்தனர். மாப்பிள்ளை முருகனுக்கு 2 பவுன் தங்கநகை போட்டுள்ளனர்.

திருமணம் முடிந்த பின்னர் முருகன் குடும்பத்தினர், தங்களுக்கு மேலும் வரதட்சிணை வேண்டும் என்று உஷாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து உஷா வீட்டினர் மேலும் 3.5 பவுன் தங்க நகையை முருகனுக்கு வரதட்சிணையாகக் கொடுத்தனர்.

இதன் பின்னரும் முருகன் குடும்பத்தினர் வரதட்சிணை கேட்டு உஷாவை கொடுமைப்படுத்தினராம். உஷா, ஞாயிற்றுக்கிழமை தனது பெற்றோருக்கு ஃபோன் செய்து இங்கு கொடுமை தாங்க இயலவில்லை என்றும், தன்னை அங்கே அழைத்து செல்லும்படியும் கூறினாராம்.

இந்நிலையில் அன்று மாலை வீட்டில் உஷா தூக்கிட்டுக் கொண்டார்.

இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே உஷா இறந்தார்.

இது குறித்து புழல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.