சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நகைக் கடையில் திருட்டு முயற்சி

கொடுங்கையூரில் நகைக் கடையில் நடந்த திருட்டு முயற்சி குறித்து போலீஸôர் விசாரணை நடத்தி

Updated On :22 மார்ச் 2013, 10:44 am

கொடுங்கையூரில் நகைக் கடையில் நடந்த திருட்டு முயற்சி குறித்து போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது:

கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் திருவொற்றியூர் பிரதான சாலையில் ஆதர்ஷ் சந்த் என்பவர் நகைக் கடை நடத்தி வருகிறார். இந்த கடை திறக்கப்பட்டு சில மாதங்கள்தான் ஆகிறதாம். செவ்வாய்க்கிழமை இரவு கடையை ஆதர்ஷ் சந்தும், ஊழியர்களும் பூட்டிவிட்டு சென்றனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சில மர்ம நபர்கள் அந்தக் கடையின் அருகே வெற்று இடத்தில் குழித் தோண்டினராம். இதைப் பார்த்த அப் பகுதி மக்கள், கடை ஊழியர்கள் குழிதோண்டுகிறார்கள் என நினைத்தனராம். ஆனால் அந்த மர்ம நபர்கள், அந்த குழியின் மூலம் நகைக்கடையில் துளைப்போட்டு அங்குள்ள நகையை திருடுவதற்காக தோண்டினராம்.

இதற்கிடையே அந்த நகைக் கடையின் சுவர் அடிப்பகுதி ஆழமாக இருந்ததால் அதைத் தாண்டி அவர்களால் தோண்ட முடியவில்லை எனத் தெரிகிறது. இதற்கிடையே புதன்கிழமை கடை திறக்க வந்த ஊழியர்கள், கடையின் சுவர் வரை அந்த குழி தோண்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்த போலீஸôர் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று, விசாரணை செய்தனர். இது குறித்து கொடுங்கையூர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.