சென்னை போரூர் அருகே தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின.
இது குறித்த விவரம்:
போரூர் அருகே உள்ள மதனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் மௌலிவாக்கம் ஜெயலட்சுமிநகரில் ஒரு அட்டை பெட்டி தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தை சத்தியமூர்த்தி 10 ஆண்டுகளாக நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவு அந்த நிறுவனத்தில் புகை வந்தது. இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள், சத்தியமூர்த்திக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த சத்தியமூர்த்தி அங்கு வந்து, நிறுவனத்தின் கதவுகளைத் திறந்து பார்த்தார். அங்கு பொருள்கள் தீப் பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவர் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர்.
இது குறித்து மாங்காடு போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்துநாசமானதாக கூறப்படுகிறது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

