சென்னை அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தனியார் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஆவடியை அடுத்த பட்டாபிராமைச் சேர்ந்தவர் சாம்ராஜின் மகன் ராம்கி (21). இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நண்பர் மனோஜ் (21) என்பவருடன் பெரும்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்தபோது தாம்பரத்தில் இருந்து திருவான்மியூர் செல்லும் அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராம்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். உடன் சென்ற மனோஜ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது குறித்து மனோஜ் கொடுத்த புகாரின் பேரில் பல்லாவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

