சென்னை கொரட்டூரில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கார் பேட்டரியை திருடியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
அம்பத்தூர் அருகே உள்ள சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (32). இவர் பாடி பார்க் சாலையில் கார் பேட்டரி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது கடையில் பல லட்சம் மதிப்புள்ள கார் பேட்டரிகள் திருடு போய்விட்டதாக ரமேஷ் கடந்த 9ம் தேதி கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
காவல் துறையினர், அப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செங்குன்றம் அருகே உள்ள சோழவரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (28) அந்த பேட்டரிகளை திருடியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார், அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 5 லட்சம் பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக போலீஸார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

