சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ரூ.5 லட்சம் மதிப்புள்ள கார் பேட்டரி திருட்டு: இளைஞர் கைது

சென்னை கொரட்டூரில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கார் பேட்டரியை திருடியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Updated On :2 மார்ச் 2013, 10:48 am

சென்னை கொரட்டூரில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கார் பேட்டரியை திருடியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

அம்பத்தூர் அருகே உள்ள சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (32).  இவர் பாடி பார்க் சாலையில் கார் பேட்டரி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.  இந்நிலையில் தனது கடையில் பல லட்சம் மதிப்புள்ள கார் பேட்டரிகள் திருடு போய்விட்டதாக ரமேஷ் கடந்த 9ம் தேதி கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

காவல் துறையினர், அப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில், செங்குன்றம் அருகே உள்ள சோழவரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (28)  அந்த பேட்டரிகளை திருடியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார், அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 5 லட்சம் பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக போலீஸார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.