சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை துறை: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை துறை உள்பட தமிழகம் முழுவதிலும்

Updated On :2 மார்ச் 2013, 11:06 am

, மார்ச் 1: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை துறை உள்பட தமிழகம் முழுவதிலும் புதிதாக கட்டப்பட்ட 41 கட்டடங்களை விடியோ கான்ஃபரன்சிங் மூலம் முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ. 17 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புற்றுநோய் சிகிச்சையின் புதிய கட்டடத்தை விடியோ கான்ஃபரன்சிங் மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். ரூ.135 கோடியே 52 லட்சம் மதிப்பில் சென்னை மருத்துவக் கல்லூரியின் புதிய கட்டடம், கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துமனையின் புதிய கட்டடம் உள்பட மருத்துவக் கல்வி இயக்ககம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகம் மற்றும் பொது சுகாதாரத் துறையின் கீழ் கட்டப்பட்ட 41 புதிய கட்டடங்களையும் திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், சுகாதாரத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து  கொண்டனர்.