வரும் கல்வியாண்டில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆய்வுப்பணிகளை மேற்கொள்வது கட்டாயமாக்கப்படும் என்று எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து கூறினார்.
காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற ஆராய்ச்சி தின விழாவில் அவர் மேலும் பேசியது:-
தற்போது உயர்கல்வி பெறும் மாணவர்களில் ஒரு சதவிகிதம் பேர்தான் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் ஆய்வுத்திறனை மேம்படுத்தும் வகையில் சிறந்த ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை ஆலோசகர் டாக்டர் எஸ்.ஆர்.ராவ் பேசும்போது, சீனா,கொரியாவை ஒப்பிடுகையில் ஆய்வுத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி மிகவும் குறைவாக உள்ளது. இந்தியாவில் ஆய்வு நடவடிக்கைகள் அதிகரிக்க கட்டமைப்பு, முதலீடு ஆகியவற்றை மேம்படுத்துவதுடன் மாணவர்களின் ஆர்வமும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றார்.
தேசிய விஞ்ஞான கழகத் தலைவர் கிருஷ்ணன்லால், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக இணை துணைவேந்தர் டி.பி.கணேசன், இயக்குநர் சி.முத்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

