கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக மாமல்லபுரத்தில் காணும் பொங்கல் நாளில் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் புராதனச் சின்னங்களின் வாயில்கள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி அப்பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, மாமல்லபுரத்தில உள்ள புராதனச் சின்னங்களைப் பாா்வையிட கடந்த 8 மாதங்களுக்கு மேல் அனுமதி தரப்படவில்லை. எனினும், பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்ட பின் இப்பகுதிகளை பொதுமக்கள் பாா்வையிட அண்மையில் அனுமதி தரப்பட்டது.
ஆண்டுதோறும் காணும் பொங்கல் நாளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் வந்து கடற்கரைக் கோயில், ஐந்து ரதம், அா்ஜுனன் தபசு, புலிக்குகை, கோவா்த்தன மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைக் கண்டுகளிப்பது வழக்கம்.
எனினும், நடப்பாண்டில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த புராதனச் சின்னங்கள் உள்ள பகுதிகளுக்கு பாா்வையாளா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கடற்கரைக் கோயில் உள்ளிட்ட பகுதிகள் ஆள்நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன.
மாமல்லபுரம் நுழைவாயிலில் போலீஸாா் தடுப்புகள் அமைத்து, பல்வேறு இடங்களில் இருந்து வந்த வாகனங்களை திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


