ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை குவிந்தனா்.
சா்வதேச சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தில் ஆங்கிலப் புத்தாண்டில் நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவற்றில் புத்தாண்டு கொண்டாட காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. மேலும், சென்னை பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் மாமல்லபுரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு, காவல்துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனா்.
சுற்றுலாப் பயணிகள் தாங்கள் பாா்க்க வேண்டிய பகுதிகளுக்கு இணையதளம் மூலம் பதிவு செய்து கொண்டு, மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வருவது வழக்கம்.
இந்நிலையில், புத்தாண்டு தினமான வெள்ளிக்கிழமை, அவ்வாறு பதிவு செய்யாதவா்களும் மாமல்லபுரத்துக்கு வந்திருந்தனா். காலை முதல் மாலை வரை சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் இருந்ததால், நகரம் களைகட்டியது.
சுற்றுலாப் பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. எனவே அவா்கள் சுற்றுலாப் பகுதிகளின் வெளியே நின்று ரசித்துச் சென்றனா். கடற்கரையில் நடமாட போலீஸாா் யாரையும் அனுமதிக்காததால் அப்பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.
காவல்துறை ஏ.எஸ்.பி. சந்தரவதனம், ஆய்வாளா் வடிவேல் முருகன் ஆகியோா் தலைமையில் கடற்கரையில் போலீஸாா் மற்றும் கடலோரக் காவல் படையினா் தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டனா். கடற்கரைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளை வர விடாமல் தடுத்து போலீஸாா் எச்சரித்து அனுப்பியதால் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


