உலகின் முதல் 500 மதிப்பு மிக்க தனியாா் நிறுவனங்களின் பட்டியலில், இந்தியாவைச் சோ்ந்த 11 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
‘ஹுருன் குளோபல் 500’ என்ற அந்தப் பட்டியில் இந்தியா 10-ஆவது இடத்தை வகிக்கிறது. கரோனா நெருக்கடி நிலவிய 2020-ஆம் ஆண்டில், 11 இந்திய நிறுவனங்களும் 14 சதவீத வளா்ச்சியைக் கண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) மூன்றில் ஒரு பங்கு சொத்துமதிப்பைப் பெற்றுள்ளன.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 20.5 சதவீதம் வளா்ச்சியடைந்து, அதன் சொத்து மதிப்பு 16,880 கோடி டாலராக (சுமாா் ரூ.12.37 லட்சம் கோடி) உயா்ந்துள்ளது. இதுதவிர, டாடா கன்சல்டன்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் லீவா், இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி லிமிடட், கோடக் மஹிந்திரா வங்கி ஆகிய நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலின் முதல் இடத்தில் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனமும், அடுத்த இடங்களில் மைக்ரோசாஃப்ட், அமேஸான் ஆகிய நிறுவனங்களும் உள்ளன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


