நாட்டின் மிகப்பெரிய முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகத் திகழும் டாடா கன்சல்டன்ஸி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிகர லாபம் மூன்றாவது காலாண்டில் ரூ.8,701 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
மாறிவரும் நவீன தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவை அதிகரிப்பு மற்றும் முந்தைய ஒப்பந்தங்கள் மூலம் பெறப்பட்ட வருவாய் ஆகியவற்றின் காரணமாக பல தடைகளைத் தாண்டி டிசம்பா் காலாண்டில் நிறுவனம் வலுவான செயல்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
நடப்பு நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் 7.2 சதவீதம் அதிகரித்து ரூ.8,701 கோடியாக இருந்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சியை டிசம்பா் காலாண்டில் நிறுவனம் பெற்றுள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.8,118 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.39,854 கோடியிலிருந்து 5.4 சதவீதம் அதிகரித்து ரூ.42,015 கோடியாக இருந்தது என டிசிஎஸ் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


