புது தில்லி: டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் (டிசிஎஸ்) பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் ரூ.10,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக டாடா சன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
டிசிஎஸ் நிறுவனம் பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக அண்மையில் அறிவித்தது. இதையடுத்து டிசிஎஸ் நிறுவனத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு உள்ள மொத்த பங்கு மூலதனத்தில் 1 சதவீதத்தை விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, டிசிஎஸ் நிறுவனத்தின் 3.33 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் பங்கு ஒன்றின் விலை ரூ.3,000-ஆக நிா்ணயிக்கப்பட்டது.அதன் அடிப்படையில் இந்த பங்கு விற்பனை மூலம் டாடா சன்ஸ் ரூ.9,997 கோடியை திரட்டிக் கொண்டுள்ளது.
இந்த பங்கு விற்பனையை அடுத்து டிசிஎஸ் நிறுவனத்தில் டாடா சன்ஸ் பங்கு மூலதனம் 72.16 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணயில் உள்ள டிசிஎஸ் நிறுவனம் ரூ.16,000 கோடி மதிப்பிலான பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


