சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடக்கம்

பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று காலை உயர்வுடன் தொடங்கியது.

News image

பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடக்கம் (கோப்புப்படம்)

Updated On :8 ஜனவரி 2021, 4:15 pm

பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று காலை உயர்வுடன் தொடங்கியது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 436 புள்ளிகள் உயர்ந்து 48,533.52 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மொத்த வர்த்தகத்தில் இது 0.92 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 145.30 புள்ளிகள் உயர்ந்து 14,283.85 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மொத்த வர்த்தகத்தில் இது 1.05 சதவிகிதம் உயர்வாகும்.

இதன் மூலம் பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை புதிய உச்சத்தை எட்டியுள்ளன.

பங்குச்சந்தையில் டெக்மஹிந்திரா, லார்சன் அண்ட் டர்போ, அல்ட்ரா டெக் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

டெக்மஹிந்திரா 3.26 சதவிகிதமும், லார்சன் அண்ட் டர்போ 3.22 சதவிகிதமும், அல்ட்ரா டெக் 2.65 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.

டைட்டன், நெஸ்ட்லே இந்தியா, பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.