சாம்சங் நிறுவனத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா வகை செல்போன் எழுதுகோல் சிறப்பம்சத்துடன் ஜனவரி 14-ஆம் தேதி அறிமுகமாகிறது.
சாம்சங் நிறுவனத்தின் மற்ற கேலக்ஸி வகை செல்போன்களில் வழங்கப்பட்ட எழுதுகோல் வசதிகளை விட கூடுதல் சிறப்பம்சங்களுடன் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா வகை செல்போன் சந்தைக்கு வருகிறது.
கேலக்ஸி எஸ் 21 அல்ட்ராவில், மற்ற வகை செல்போன்களின் எழுதுகோல் போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், எழுதுகோலின் முனையில் அழுத்தம் உணரும் சென்சார் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேம்களை விளையாடவும், விடியோக்களை இயக்கவும், நிறுத்தி வைக்கவும், புகைப்படங்களை எடுக்கவும் முடியும்.
சாம்சங் கேலக்ஸியில் வெளிவரவுள்ள கேலக்ஸி எஸ் 21 மற்றும் கேலக்ஸி எஸ் 21 பிளஸ் ஆகிய வகை செல்போன்களை விட கூடுதல் கேமரா வசதியையும், வெளிப்புறத் தோற்றத்தையும் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா கொண்டுள்ளது.
கேலக்ஸி எஸ் 21 6.2 அங்குல திரையும், கேலக்ஸி எஸ் 21 பிளஸில் 6.7 அங்குல திரையும், கேலக்ஸி எஸ் 21 அல்ட்ராவில் 6.8 அங்குல திரையும் வழங்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா வகை செல்போனில் முன்புறத்தில் 10MP கேமராவும், பின்புறத்தில் 10 மடங்கு ஜூமிங் வசதியுடன் 108MP மெயின் கேமராவும், 12MP அல்ட்ரா வைட் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

