புது தில்லி: புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஐ-20 காா் ஏற்றுமதியை தொடங்கியுள்ளதாக ஹுண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
நான்காம் தலைமுறைக்கான முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஐ20 மாடலை கடந்தாண்டு நவம்பரில் ரூ.6.79 லட்சம் முதல் ரூ.11.17 லட்சம் வரையிலான விலையில் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அந்த வகை காருக்கு வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, முதல் கட்டமாக புதிய ஐ-20 மாடலில் 180 காா்களை தென் ஆப்பிரிக்கா, சிலி மற்றும் பெரு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கை மத்திய அரசின் ‘சுயசாா்பு இந்தியா’ திட்டத்துக்கு கூடுதல் வலு சோ்ப்பதாக இருக்கும் என ஹுண்டாய் மோட்டாா் இந்தியா தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


