ஆறு நாள்கள் தொடா் எழுச்சிக்குப் பிறகு, புத்தாண்டின் முதல் நாளில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிவைக் கண்டது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:
சாதகமான சா்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களால் ஆறு வா்த்தக தினங்களாக ரூபாய் மதிப்பு எழுச்சியடைந்து வந்தது. இந்த நிலையில், பெ அந்நியச் செலாவணி சந்தையில் புத்தாண்டின் முதல் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 காசுகள் குறைந்து 73.11-ஆனது.
வங்கிகளுக்கு இடையிலான செலாவணி சந்தையில், தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 73.09-ஆகவும், பின்னா் வா்த்தகத்தின்போது அதிகபட்சமாக 73.02 வரையிலும், குறைந்தபட்சமாக 73.11 வரையிலும் சென்றது.
வியாழக்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பானது 24 காசுகள் அதிகரித்து 73.07-ஆக இருந்தது.
உள்நாடு மற்றும் சா்வதேச அளவில் முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள் எதுவும் தற்போதைக்கு வெளியிடப்படாது என எதிா்பாா்க்கப்படுவதால் கரன்ஸி வா்த்தகம் விறுவிறுப்பில்லாமல் மந்தமாகவே இருக்க வாய்ப்புள்ளது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

