தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் முதலீட்டுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் வணிக வளர்ச்சித் துறை பொதுமேலாளர் செல்வன் ராஜதுரை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பல்வேறு கால அளவுகளுக்கான முதலீட்டுக்குரிய வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இவ்வங்கியானது 91 நாள்கள் முதல் 10 ஆண்டுகளுக்கான முதலீடுகளுக்கு வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் முதல் 0.50 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. மேலும் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் முதல் 0.50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், 91 நாள்கள் முதல் 179 நாள்கள் வரைக்குமான முதலீட்டுக்கான வட்டி விகிதம், 8 சதவீதத்தில் இருந்து 8.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 180 நாள்கள் முதல் ஒரு ஆண்டுக்கும் குறைவான முதலீடுகளுக்கு வட்டி விகிதம் 8.75 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு ஆண்டு முதல் மற்றும் 5 ஆண்டுகள் வரையிலான முதலீடுகளுக்கான வட்டி விகிதம் பொதுமக்களுக்கு 9.25 சதவீதத்தில் இருந்து 9.50 சதவீதமாகவும் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 9.50 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது.
5 ஆண்டுகளுக்கு மேல் 10 ஆண்டுகள் வரையிலான முதலீட்டுக்கான வட்டி விகிதம் மூத்த குடிமக்களுக்கு 9.25 சதவீதத்தில் இருந்து 9.50 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகிதங்கள், ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


