சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இந்திய பங்குச் சந்தையில் 7ஆவது நாளாக சரிவு

இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து 7ஆவது நாளாக வியாழக்கிழமையும் சரிவில் முடிந்தன. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டெண்ணான சென்செக்ஸ் வர்த்தக முடிவில் 29 புள்ளிகள் குறைந்து 19,317இல் முடிந்தது.

Updated On :2 ஆகஸ்ட் 2013, 4:52 am

இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து 7ஆவது நாளாக வியாழக்கிழமையும் சரிவில் முடிந்தன. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டெண்ணான சென்செக்ஸ் வர்த்தக முடிவில் 29 புள்ளிகள் குறைந்து 19,317இல் முடிந்தது.

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவை விட அதிகரித்திருப்பதாக வெளியான தகவல் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கின. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 179 புள்ளிகள் வரை உயர்ந்தது.

ஜூலை மாதத்தில் நாட்டின் உற்பத்தித் துறை நடவடிக்கைகள் குறைந்திருப்பதாக எச்எஸ்பிசி ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து பங்குச் சந்தைகள் மளமளவென சரிந்தன. எனினும், வர்த்தக முடிவில் சரிவின் தாக்கம் குறைந்தது. மொத்தம் உள்ள 13இல் 12 துறை சார்ந்த பங்குகள் சரிவில் முடிந்தன.

தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டெண்ணான நிப்டி 17 புள்ளிகள் குறைந்து 5,728இல் முடிந்தது.