சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பவுனுக்கு ரூ.344 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (ஜூலை 11) பவுனுக்கு ரூ.344 உயர்ந்துள்ளது. சென்னை மார்க்கெட்டில் ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On :12 ஜூலை 2013, 11:04 am

ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (ஜூலை 11) பவுனுக்கு ரூ.344 உயர்ந்துள்ளது. சென்னை மார்க்கெட்டில் ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக இந்திய சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்படுகிறது. கடந்த மாதம் 25-ஆம் தேதி சென்னையில் ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்து 208-ஆக இருந்தது. அதன் பிறகு சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சரிவு காரணமாக ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவாகவே ஒரு பவுன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் வியாழக்கிழமை சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்ந்தது. இதனால் இந்தியாவிலும் அதன் விலை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தங்கத்தின் விலை உயர்ந்ததன் எதிரொலியாக வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.2,525 உயர்ந்து சென்னை மார்க்கெட்டில் ரூ.42 ஆயிரத்து 665-க்கு விற்கப்பட்டது.

வியாழக்கிழமை

மார்க்கெட் நிலவரம்:

ஒரு கிராம் ரூ.2,515

ஒரு பவுன் ரூ.20,120

ஒரு கிராம்

வெள்ளி ரூ.45.70

ஒரு கிலோ

வெள்ளி ரூ.42,665

புதன்கிழமை

மார்க்கெட் நிலவரம்:

ஒரு கிராம் ரூ.2,472

ஒரு பவுன் ரூ.19,776

ஒரு கிராம்

வெள்ளி ரூ.43

ஒரு கிலோ

வெள்ளி ரூ.40,180