மே மாதத்தில் எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசு வெளிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
புது தில்லியில் மத்திய வர்த்தக மற்றும் தொழிலகத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களின்படி மே மாதத்தில் உள்கட்டமைப்பு தொடர்பான எட்டு முக்கிய துறைகளில் 2.3 சதவீத வளர்ச்சியே காணப்பட்டிருக்கிறது.
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரித்த பெட்ரோலிய பொருள்கள், உரம், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகியவை எட்டு முக்கிய துறைகள். பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடுவதில் இவை பெரும் பங்கு வகிக்கின்றன.
மே மாதத்தில் நிலக்கரி உற்பத்தி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உரம் ஆகியவற்றின் உற்பத்தி குறைவாக இருந்தது என்று மத்திய வர்த்தக மற்றும் தொழிலகத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த உற்பத்தியைக் கணக்கிடுவதில் இந்த எட்டு துறைகளின் பங்களிப்பு 38 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் எஃகு உற்பத்தி 4.1 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு மே மாதத்தில் எஃகு உற்பத்தி 3 சதவீதம் மட்டுமே அதிகரித்திருந்தது.
ஆயினும் சிமெண்ட் உற்பத்தி 2012-ஆம் ஆண்டு 15.4 சதவீதம் அதிகரித்திருந்த நிலையில், இந்த ஆண்டு மே மாதம் வெறும் 3 சதவீதம் மட்டுமே சிமெண்ட் உற்பத்தி வளர்ச்சி கண்டிருக்கிறது. 2012-ஆம் ஆண்டில் இந்த எட்டு முக்கிய துறைகள் ஒட்டுமொத்தமாக 3.2 சதவீத அளவு வளர்ச்சி அடைந்தது. இந்த ஆண்டில் இந்த துறைகள் ஒட்டுமொத்தமாக 2.3 சதவீதம்தான் வளர்ச்சி அடைந்திருக்கின்றன என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

