சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அரசு பத்திரங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு

ரூ. 39ஆயிரம் கோடி மதிப்பிலான இந்திய அரசு கடன் பத்திரங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

Updated On :22 ஜூன் 2013, 4:45 am

ரூ. 39ஆயிரம் கோடி மதிப்பிலான இந்திய அரசு கடன் பத்திரங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

அரசு கடன் பத்திர ஏலத்தினை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான "செபி' வியாழக்கிழமை நடத்தியது. அப்போது ரூ. 39 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வாங்கியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கடன் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் செய்யக் கூடிய முதலீட்டின் உச்ச வரம்பு ரூ. 42 ஆயிரத்து 22 கோடியாகும். இதில் ரூ. 39 ஆயிரத்து 171 கோடி மதிப்பில் கடன் பத்திரங்களை இந்நிறுவனங்கள் வாங்கியுள்ளன. இது 93 சதவீதமாகும். எஞ்சியுள்ள ரூ. 2,851 கோடி மதிப்பிலான பங்குகளுக்கும் கூடுதல் ஒதுக்கீடுகளுக்கும் அடுத்த மாதம் ஏலம் நடைபெறும். 37 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் கலந்துகொண்டன.